Home உலகம் பிரான்சில் ஜூன் – ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றில் 1,435 பேர் உயிரிழந்தனர்…

பிரான்சில் ஜூன் – ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றில் 1,435 பேர் உயிரிழந்தனர்…

by admin

பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றில் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் அன்யஸ் புசாங், தெரிவித்துள்ளார். உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனத் தெரிவித்த அமைச்சர் உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். பிரான்சில் கடந்த ஜுன் மாதத்தில் இதுவரை காலம் இல்லாத அளவுக்கு 46 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

ஏனைய ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா , பெல்ஜியம், ஜெர்மனி, லக்சர்ம்பெர்க் மற்றும் நெதர்லாந்திலும் காலம் இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகியருந்த போதிலும் இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளை, பிரான்ஸ் நாட்டை தவிர வேறு எந்த நாடும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.