71
சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கை பிரஜை ஒருவரை இராமேஸ்வரம் காவற்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் இராமேஸ்வரம் காவற்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love