Home இலங்கை பேச்சுவார்த்தை வெற்றி – பங்காளிகளுடன் கலந்துரையாடி வேட்பாளர் தெரிவாவார்…

பேச்சுவார்த்தை வெற்றி – பங்காளிகளுடன் கலந்துரையாடி வேட்பாளர் தெரிவாவார்…

by admin

பேச்சுவார்த்தை வெற்றி…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் பலன்களை எதிர்வரும் சில நாட்களில் கண்டுகொள்ள முடியும் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்றிரவு (10.09.19) 9.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமான பேச்சுவார்த்தை இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் தொடர்ந்தும் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுமெனவும் தனக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடியே வேட்பாளர் தெரிவு…

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் இன்னும் சில நாட்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், அதற்கான நாள் இதுவரை இறுதிச்செய்யப்படவில்லை என, அறியமுடிகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More