Home இலங்கை காணி விடுப்பு தொடர்பிலான கலந்துரையாடல்….

காணி விடுப்பு தொடர்பிலான கலந்துரையாடல்….

by admin

யாழ் மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளைவிடுவிப்பதுதொடர்பிலான கலந்துரையாடலொன்றுயாழ் மாவட்டச் செயலகத்தில் இன்றுநடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தலைமையில் நடைபெற்றஇக் கலந்துரையாடலில் வடக்குமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்து கொண்டிருந்தார்

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராசா, சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இரானுவம், காவற்துறையினர், கடற்படையினர் அரசஅதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது யாழ் மாவட்டத்தில்முப்படைகளின் வசம் உள்ள பொதுமக்களின் காணிகள் குறித்தும்விடுவிப்பதற்கு முன்னெடுக்க வேண்டியநடவடிக்கைகள் குறித்தும்ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More