Home இலங்கை அரியாலை முள்ளியில் துப்பாக்கி சூடு…

அரியாலை முள்ளியில் துப்பாக்கி சூடு…

by admin

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது  விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காலில் காயமடைந்துள்ளார். அரியாலை முள்ளி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை குறித்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அரியாலை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தொடர்பில்  விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

அதன் போது மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏனையவர்கள் தப்பி சென்ற நிலையில் உழவு இயந்திர சாரதி அதிரடி படையினரை நோக்கி உழவு இயந்திரத்தை வேகமாக செலுத்தி சென்ற வேளை அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதன் போது அரியாலை முள்ளி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய  கி.சஜீவன் எனும் நபர் காலில் காயமடைந்துள்ளார். காலில் காயமடைந்த நபரை அங்கிருந்து மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த விசேட அதிரடி படையினர் உழவு இயந்திரத்தை மணலுடன் கைப்பற்றி யாழ். காவற்துறை நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பான காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , சம்பவத்தில் தப்பி சென்ற ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More