Home இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் முன்னிலை :

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் முன்னிலை :

by admin

ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாகியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே பிரதமர் இன்றையதினம் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

விவசாயத்துறை அமைச்சை பராமரித்துச் செல்வதற்காக ராஜகிரியில் அமைந்துள்ள தனியார் கட்டிடம் ஒன்றை பெற்றுக் கொண்டமை தொடர்பில் இடம்பெற்றதாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பிலேயே பிரதமருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  #ஜனாதிபதிஆணைக்குழு  #பிரதமர் #முன்னிலை  #ஊழல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More