Home இந்தியா எல்.ஐ.சி. பணத்தை நஷ்டமடையும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம்…

எல்.ஐ.சி. பணத்தை நஷ்டமடையும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம்…

by admin


எல்.ஐ.சி. பணத்தை எடுத்து பா.ஜனதா அரசு நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எல்.ஐ.சி. நிறுவனம், கடந்த இரண்டரை மாத காலத்தில் 57 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நம்பிக்கைக்கு மற்றொரு பெயர் எல்.ஐ.சி.. அதனால்தான், மக்கள் கடினமாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தை எல்.ஐ.சி.யில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், பா.ஜனதா அரசோ, அந்தப் பணத்தை எடுத்து நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்கிறது. இதனால் மக்களின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டு விட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More