Home இலங்கை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது…

by admin

கடந்த காலத்தைப்போன்றே இன்றும் கூட்டணி அல்லது முன்னணியின்றி எவராலும் ஆட்சியை கைப்பற்ற இயலாது என்றும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இடசாரி முற்போக்கு முன்னணியாக ஒன்றிணைந்தவர்களின் அரசியல் செயற்பாட்டாளர்களினாலேயே முடியுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று (22.09.19) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய  ஜனாதிபதி,  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டுக்காக அரசியல் செய்யும் குழுவினரின் முன்னணியை உருவாக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

திருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என்றும், இன்று வலுப்பெற்று வரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் உருவாகும் புதிய அரசாங்கம் நாட்டை நேசிக்கும் தேசப் பற்றுடைய அனைத்து இனப் பிரிவுகளுக்கிடையே நம்பிக்கையை உறுதி செய்யக்கூடிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாக வாழக்கூடிய உரிமையை உறுதி செய்வது காலத்தின் கட்டாயமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்நிய நாட்டு சக்திகளுக்கு அடிபணியாத அரசாங்கம் ஒன்று எதிர்வரும் காலங்களில் உருவாக வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தவிர்த்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு கட்சிகளும் தூதுவராலயங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஊழல் சக்திகளை தோல்வியடையச் செய்யும் மக்கள் நேய வேலைத்திட்டமொன்று நாட்டுக்கு தேவையாக இருப்பதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடையாளம், அபிமானம் மற்றும் கட்சி உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, குமார வெல்கம, மனோஜ் சிறிசேன மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More