Home உலகம் ஈரானில் பயணிகள் புகையிரதம் தடம்புரண்டு விபத்து – 5 பேர் பலி – 92 பேர் காயம்

ஈரானில் பயணிகள் புகையிரதம் தடம்புரண்டு விபத்து – 5 பேர் பலி – 92 பேர் காயம்

by admin

ஈரான் நாட்டில் பயணிகள் புகையிரதம் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 92 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டின் சிஸ்டன் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சகேதன் நகரில் இருந்து தலைநகர் தெஹ்ரானுக்கு 250 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயணிகள் புகையிரதே இவ்வாறு திடீரென தடம் புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்பகுதிகளில் வீசும் அதிகப்படியான காற்றினால் தண்டவாளங்கள் மணலால் மூடப்படுகின்றதனால் இம்மாதிரியான விபத்துக்கள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்  #ஈரான் #பயணிகள் #புகையிரதம் #விபத்து

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More