அரசியலில் இருந்து ஓய்வுபெறபோவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டிசம்பரின் பின்னர் புதிய நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தான் நல்ல உடல்நலத்துடன் உள்ளதால் ஓய்வுபெறவேண்டிய தேவையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டிற்கான திட்டத்தை தன்னால் சிறப்பாக முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார். #ஓய்வு #மைத்திரிபால
Spread the love
Add Comment