Home இலங்கை 17 பேர் கட்டுப்பணம் செலுத்தினர் – ஐ.தே.க செலுத்தவில்லை…

17 பேர் கட்டுப்பணம் செலுத்தினர் – ஐ.தே.க செலுத்தவில்லை…

by admin

இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி அபேட்சகராகப் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் ஒரே நாளில் ஜே.வி.பி உட்பட நால்வர் கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளனர்.

இலங்கையின் 8வது ஜனாதிபதிக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான வேட்பு மனுத் தாக்கல் இம் மாதம் 7ம் திகதி இடம்பெறவுள்ளது.

அவ்வாறு இடம்பெறவுள்ள வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் 50 ஆயிரம் ரூபாவும் சுயேட்ச்சையாக போட்டியிடுபவர்கள் 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

இதன் அடிப்படையில் நேற்னைய தினம் நால்வர் கட்டுப்பணத்தை செலுத்தியதன் மூலம் இதுவரை 17 பேர் கட்டுப்பணம் செலுத்தியபோதும் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை கட்டுப்பணம் செலுத்தவில்லை.  இதேநேரம் ஜே.வி.பி கட்சியின் சார்பில் அநுராகுமார திசநாயக்காவின் சார்பில் நேற்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More