Home இலங்கை கோத்தாபயவின் சட்டத்தரணிகள் உள்ளிட்டோருக்கு கடும் எச்சரிக்கை…

கோத்தாபயவின் சட்டத்தரணிகள் உள்ளிட்டோருக்கு கடும் எச்சரிக்கை…

by admin

கோத்தாபய சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணியுடன் முன்னிலையான சில கனிஷ்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கொதகொட கடுமையாக எச்சரித்து தனது விசனத்தையும் தெரிவித்துள்ளார்.

கோத்தாபயவிற்கு எதிராக கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பு நேற்று மாலை 6 மணியளவில் நீதியரசரால் மேன்முறையீட்டு நீதிமன்றின் 301ம் இலக்க அறையில் இடம்பெற்றது.

இதன்போது நீதியரசர் தீர்ப்பை வாசித்து “வழக்கை தள்ளுபடி செய்கின்றேன்” எனத் தெரிவித்த சமயம் சில சட்டத்தரணிகளும் அவர்கள் திசையில் இருந்த எதிராளியின் ஆதரவாளர்களும் கூக்குரல் இட்டு ஆரவாரித்தனர். இதன்போதே நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது நீதியரசர் மேலும் தெரிவிக்கையில், கறுப்பு உடைபோட்டுக்கொண்டு இவ்வாறான செயலில் ஈடுபடுவது சட்டத்துறைக்கு அவமானமான செயல் இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனத் தெரிவித்தார்.

இதன்போது எதிராளி சார்பில் ஆயரான சட்டத்தரணிகளில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ்டீ சில்வா மன்றில் மன்னிப்பு கோரினார். இதன்போது நீதியரசர் இவ்வாறு மன்றை அவமதிப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உண்டு எனச் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த சட்டத்தரணி நான் உங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தேன் எனக்கு யார் கூ அடித்தது எனத் தெரியாது எனப் பதிலளித்தார்.

இதன்போது நீதியரசர் இது மிக கீழ்த்தரமானதும் மனவருத்தம் அளிக்கும் ஓர் நடத்தை நான் நினைக்கின்றேன் சட்டத்தரணிகள் யாரும் இதில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என அவ்வாறு ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More