இலங்கை பிரதான செய்திகள்

முருங்கன் காவல் நிலையம் வடமாகாண ஆளுனரால் திறந்து வைப்பு

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் அமைக்கப்பட்ட புதிய முருங்கன் காவல் நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனினால்வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

தற்காலிகமாக இயங்கி வந்த முருங்கன் காவல் நிலையத்திற்கான நிரந்தர கட்டிடமானது 5 ஏக்கர் நிலப்பரப்பில் காவல்துறைத் திணைக்களத்தின் 4.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் கலந்து கொண்டாதுடன் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரவி விஜய குணவர்த்தன , வன்னி பிராந்திய காவல்துறைமா அதிபர் அனுர அபய விக்ரம, மற்றும் மன்னார் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, உற்பட மன்னார் மாவட்ட காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் காவல்துறை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த காவல்நிலைய திறப்பு விழா நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது. #காவல்நிலையம் #வடமாகாண  #திறந்து

 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.