Home உலகம் நெட்டன்யாகூ ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்

நெட்டன்யாகூ ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்

by admin

இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூவின் லிகுட் கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்தத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சியான புளூ அன்ட் ஒயிட் கட்சியுடன் கூட்டணி வைத்து தேசிய அரசை அமைக் பென்ஜமின் நெட்டன்யாகூ முயற்சி செய்த போதும் அக்கட்சி மறுத்துவிட்;டது

அதனை தொடர்ந்து ஆட்சியமைக்க வரும்படி பென்ஜமின் நெட்டன்யாகூவுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ருவென் ரிவ்லின் அழைப்பு விடுத்ததுடன் 28 நாட்களுக்குள் அமைச்சரவையை அமைக்க காலக்கெடு விதிக்கப்பட்டது. ஆட்சியமைக்க 61 உறுப்பினர்களின் தேவை என்ற நிலையில் பென்ஜமின் நெட்டன்யாகூ சிறிய கட்சிகளின் ஆதரவை பெற கடுமையாக முயற்சித்தார்.

எனினும் அவரால் 55 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற முடிந்தமையினால் அவர் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தார். ஆட்சியமைப்பதற்கான காலக்கெடு முடிய இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் பென்ஜமின் நெட்டன்யாகூ முன்னதாகவே தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். ஜனாதிபதி ருவென் ரிவ்லின் உடனான சந்திப்புக்கு பின்னர் பென்ஜமின் நெட்டன்யாகூ இதனை அறிவித்துள்ளார்

இதையடுத்து, ஆட்சியமைக்க வரும்படி புளூ அன்ட் ஒயிட் கட்சிக்கு ஜனாதிபதி; அழைப்பு விடுத்து அவருக்கும் 28 நாட்கள் காலக்கெடு வழங்கப்படும். அவரும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பை இழக்கும் பட்சத்தில் பெரும்பான்மையை பெறுவார் என நினைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஆட்சிஅமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுப்பார்

21 நாட்களுக்குள் அதுவும் நடக்கவில்லையென்றால் நாட்டில் புதிய பொதுத்தேர்தலை ஜனாதிபதி அறிவிப்பார். ஆவ்வாறு தேர்தல் நடந்தால் அது ஒரே ஆண்டில் நடக்கும் 3-வது பொதுத்தேர்தலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #இஸ்ரேல் #நெட்டன்யாகூ #ஆட்சி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More