Home இந்தியா இந்தியாவில் பெண்கள், சிறுவர்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை…

இந்தியாவில் பெண்கள், சிறுவர்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை…

by admin

இந்திய அளவில்  பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை திகழ்கிறது என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து உள்ளது. சென்னையில் கடந்த 2015-17-ம் ஆண்டுகளுக்கான குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி,

* இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது.

* அதேபோல குழந்தைகளுக்கும், மிக பாதுகாப்பான பெருநகரமாக சென்னை விளங்குகிறது.

* இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மிக குறைந்த அளவான பொருளாதார குற்றங்களே சென்னையில் நிகழ்ந்துள்ளது.

* கணினி வழி குற்றங்களும் இங்கு மிக குறைந்த அளவே நடந்துள்ளது.

* இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் கொடூரமான குற்றங்கள் மிக குறைந்த அளவே சென்னையில் நடந்துள்ளன.

* பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்களும் மிக குறைவான எண்ணிக்கையிலேயே நிகழ்ந்து இருக்கின்றன.

* பழங்குடியினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவும் சென்னையில் நிகழவில்லை.

* இந்திய தண்டனை சட்ட பிரிவின் (ஐ.பி.சி.) கீழான குற்றங்களில் மிக குறைவான அளவு குற்றங்களே நிகழ்ந்துள்ளதுடன், ஐதராபாத்துக்கு அடுத்த இடத்தில் சென்னை இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More