Home இலங்கை “திருடப்பட்ட மக்களின் பணம் மக்களிடமே மீண்டும் வழங்கப்படும்”

“திருடப்பட்ட மக்களின் பணம் மக்களிடமே மீண்டும் வழங்கப்படும்”

by admin

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம்வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இன்று (26.10.19) அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில ,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய திட்டம் 5 ஆண்டுகளில் நிறுத்தப்படும்.

மக்களின் வரிப்பணத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களது பாரியார்களுக்கும் வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் நிறுத்தப்படும்.

அமைச்சரவை 30 ஆக மட்டுப்படுத்தப்படும் (அமைச்சர்கள் 30, பிரதி அமைச்சர்கள் 30)

இராஜாங்க மற்றும் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர்கள் இனிமேல் இருக்கப்போவதில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகனத்தை பெற்றுக்கொள்வதற்கான சலுகைகள் இல்லாமல் செய்யப்படும்.

ஜனாதிபதி தேவைக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி 90 விகிதமாக குறைக்கப்படும்.

நாடு முழுவதும் காணப்படும் ஜனாதிபதி மாளிகைகள் சுற்றுலா ஹோட்டல்கள், கலாச்சார மையங்கள் மற்றும் நூலகங்களாக மாற்றப்படும்.

திருடப்பட்ட மக்களின் பணத்தை மீண்டும் மக்களிடமே வழங்கப்படும். முதலான முக்கிய வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More