Home இந்தியா சிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறையிலுள்ள முருகனை உறவினர்கள் சந்திக்க அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

by admin


இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சிறை துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், அண்மையில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டதனை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்க வேண்டும் எனவும் அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்கள் பார்க்க அனுமதிக்க வேண்டும் மற்றும் தனிமை சிறையில் உள்ள முருகனை சாதாரண சிறைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியும் அவரது உறவினர் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் சிறை துறை தரப்பில் முன்னிலையான அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் நடராஜன், பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், முருகன் வைக்கப்பட்டிருந்த  ப்ளாக்- 1 சிறையில் கடந்த ஒக்டோபர் 18 மற்றும் நவம்பர் 19ம் திகதிகளில் சிறைதுறையினர் நடத்திய சோதனையில், முருகனது அறையில் இருந்து கைத்தொலைகேசி;, சார்ஜர், கத்தி, பழைய பிளேட் உள்ளிட்ட 13 பொருட்கள் கைபற்றப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறை விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த காரணத்தினால், 3 மாதத்திற்கு முருகனை யாரும் சந்திக்க கூடாது என தண்டனை வழங்கியிருப்பதாகவும் அதில்தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆத்துடன் , முருகன் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது எனவும், கைர்தொலைபேசி ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ள ப்ளாக்-2 சிறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, முருகனுக்கு வழங்கப்பட்டுள்ள 3 மாத கால தண்டனையை திரும்ப பெற்று கொள்ள சிறை துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முருகன் அவரது மனைவி மற்றும் உறவினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், முருகனை வேறு ப்ளாக்கிற்கு மாற்றியது தொடர்பான நிர்வாக உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், முருகன் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட அறிவுறுத்துமாறு மனுதாரரின் வழக்குரைஞரிடம் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.  #சிறை #முருகன் #உறவினர்கள்  #உயர்நீதிமன்றம் #நளினி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More