Home இலங்கை தம்பிராசா விடுதலையானார்..

தம்பிராசா விடுதலையானார்..

by admin

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலக வேண்டும் என கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா காவற்துறையினரால் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்ட நிலையில் இரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட தபால் மூல வாக்காளர்களின் விபரத்தை கோரிய போது அது சிங்கள மொழியில் தரப்பட்டதாகவும், அது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்ட போது, தமிழில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியபோதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதமையால், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என கோரி வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.

அதனை அடுத்து தேர்தல் கடமைக்காக மாவட்ட செயலகத்தில் கடமையில் இருந்த காவற்துறையினர் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். அதற்கு அவர் உடன்படாததையடுத்து, காவற்துறையினர் அவரை பலவந்தமாக கைது செய்து தூக்கி சென்றனர்.

கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் விசாரணைகளின் பின்னர் இரவு 10 மணியளவில் அவரை விடுவித்தனர்.

குறித்த நபர் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இணைப்பு செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More