Home இலங்கை கோத்தாபய   தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்

கோத்தாபய   தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்

by admin


இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக நேற்றைய தினம் அனுராதபுரம் ருவன்வெலிசாயவில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட கோத்தாபய ராஜபக்ஸ இன்று காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்

இதையடுத்து உடனடியாக சில நியமனங்களும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், திறைசேரியின் செயலாளராக முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எஸ்.ஆர் ஆட்டிகலவும் ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்;.

அதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவராக ஓசத சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். #கோத்தாபய  #உத்தியோகபூர்வமாக  #சத்தியப் பிரமாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More