Home இலங்கை கொழும்பில் வளிமண்டல தூசு மீண்டும் அதிகரிப்பு…

கொழும்பில் வளிமண்டல தூசு மீண்டும் அதிகரிப்பு…

by admin


​கொழும்பு நகரை அண்மித்த வளிமண்டலத்தில் தூசு துகள்களின் தரச்சுட்டி மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகரை அண்மித்த வளிமண்டலத்தில் இன்று காலை 150 புள்ளியாக தூசு துகள்களின் தரச்சுட்டி காணப்பட்டதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.

காலை 6 மணி தொடக்கம் 9 மணி வரையான காலப்பகுதியில் இந்த நிலை காணப்படுவதாக அவர் கூறினார். எதிர்வரும் ஒரு மாதத்திற்கு இந்த நிலை தொடரும் எனவும்  வானிலை மாற்றம் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும்  சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டினார்.

வளிமண்டலத்தில் தூசு துகள்களின் தரச்சுட்டி அதிகரிப்பதால் சுவாச நோயாளர்களுக்கு பாதிப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுவாச நோயாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி கூறினார். இதனை தவிர, வயதானவர்கள், சிறு பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சுவாசிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை சந்திப்பது சிறந்தது எனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி சுட்டிக்காட்டினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More