Home இலங்கை எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை – சந்தேக நபர்களுக்கு பிணை

எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை – சந்தேக நபர்களுக்கு பிணை

by admin

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு எதிர்வரும் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை இரசியமாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்துவைக்கும் நோக்கில், கடத்தியமை மற்றும் கொலை செய்தமை உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிணை வழங்கப்பட்ட சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ள நீதிமன்றம், அவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.  #பிரகீத்எக்னலிகொட  #காணாமல்ஆக்கப்பட்டமை  #பிணை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More