Home இலங்கை காவற்துறை ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்?

காவற்துறை ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்?

by admin

காவற்துறை  ஊடகப் பிரிவின் நடவடிக்கைகள் நேற்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவற்துறை  ஊடகப் பிரிவால் நேற்றைய நாளில் எந்தவித ஊடக அறிக்கைகளும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அத்துடன் காவற்துறை  ஊடகப் பேச்சாளரின் கையடக்க தொலைப்பேசியும் பயன்பாட்டில் இல்லை என்பதோடு, காவற்துறை  ஊடகப் பிரிவின் நிலையான தொலைப்பேசியும் இயங்கவில்லை. இது தொடர்பில் அததெரண தேடி பார்த்தது.

அப்போது காவற்துறை ஊடகப் பிரிவின் செயற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தின் ஊடாக, புதிய தொழிநுட்பங்களுக்கு ஏற்ப முன்னெடுக்க முயற்சிக்கப்படுவது குறித்து தெரியவந்தது. இதன் காரணமாகவே காவற்துறை  ஊடகப் பிரிவு தற்காலிகமாக இயங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More