Home இந்தியா பெண்களுக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பு இல்லையா? – இந்திய நாடாளுமன்றம் முன் இளம்பெண் போராட்டம்….

பெண்களுக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பு இல்லையா? – இந்திய நாடாளுமன்றம் முன் இளம்பெண் போராட்டம்….

by admin


சொந்த நாட்டிலேயே என்னால் பாதுகாப்பாக இருக்கிறேன் என உணர முடியவில்லையே ஏன்? என்ற முழக்கத்துடன் இளம்பெண் ஒருவர் இந்திய நாடாளுமன்ற வளாகம் முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் தெலுங்கானாவில் பெண் தாசில்தார் ஒருவர் தனது அலுவலகத்தினுள்ளேயே கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

அந்த அதிர்ச்சியிலிருந்து அம்மாநில மக்கள் விடுபடுவதற்குள் கடந்த 27ம் தேதி ஐதராபாத் புறநகர் பகுதியில் பெண் வைத்தியர் பிரியங்கா ரெட்டி, கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து அனு துபே என்ற இளம்பெண் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

 நாடாளுமன்றத்தின் 2-3 வது வாயில்களின் நடைபாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர் ‘எனது சொந்த நாட்டிலேயே என்னால் பாதுகாப்பை உணர முடியவில்லையே, ஏன்?’ என கோஷமிட்டார். இதையடுத்து அங்கு சென்ற காவற்துறையினர்  அவரை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால், அவர் மறுத்ததால் அவரை நாடாளுமன்றம் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளைச் சொல்லி தேம்பித்தேம்பி அழுத அந்த இளம்பெண்ணை, காவற்துறையினர்  இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More