Home இலங்கை அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பு அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பு அதிகரிப்பு

by admin
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டதில்  அண்மைக்காலமாக  கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக  கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன்  கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை  ந்டார்த்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான  கடந்த சில வாரங்களாக  கடலில் ஏற்பட்டுள்ள    நீரோட்டத்தின் தன்மையில்   ஏற்பட்டுள்ள  மாற்றத்தினாலும்,நீரோட்டத்தினாலும்   மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனாலும் , தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாக குறிப்பிடுகின்றனர். மீன்பிடியை நம்பி வாழ்வை நடார்திவரும் மீனவ்ர்கள் மீன்பிடி குறைந்த்துள்ள காரணத்தால் மூலதனத்தை செலவுசெய்து கடலுக்கு சென்று வெறுங்கையோடு வீடு செல்ல நேரிடுகினறது.
இது குறித்து மீனவர்கள் க்ருத்து தெரிவிக்கையில்

நீரோட்டத்தின் வேகம் காரணமாக வலைகள் வேறு  திசைக்கு இழுத்து செல்லப்படுகிறது . இதனால் கரையோர மீன்பிடி முற்றாக பாதிக்கப்படுகின்றது. கடற்றோழில் மீன்பிடியை நம்பியுள்ள மீனவைகள் பல மூலதனங்களை செலவு செய்து நாள் முழுவதும் கடலில் தொழிலுக்கு சென்றுவெறுங்கையோடு திரும்புவதால் மீனவ குடும்பங்கள் ஏமாற்றத்துடன் வாழ்கையை நாடார்திவருவதாக மிகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆழ் கடல் மீன்பிடிக்கு செல்லும் மீனவர்கள் பத்தாயிரக்கணக்கான ரூபாய் பணத்தை செலவழித்து கடலுக்கு செல்கின்றனர் ஆழ் கடலில்  நீரோட்டத்தில்  அடிக்கடி  போது ஏற்படும் சுழலினால் வலைகள்  சுருட்டப்பட்டு மீண்டும் மீன்பிடிக்க முடியாத நிலைக்கு வலைகள் நாசமாகின்றன என எமக்கு தெரிவித்தனர்.  #அம்பாறை  #கடலரிப்பு   #மீனவர்கள்

  

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More