Home இலங்கை 7 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் தீ

7 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் தீ

by admin

(க.கிஷாந்தன்)

தலவாக்கலை காவல்துறைப் பிரிவிற்குட்டபட்ட  வட்டகொடை யோக்ஸ்போட் தோட்டம் மணிபூர் பிரிவில் 7 வீடுகள் கொண்ட 8ம் இலக்க தொடர் லயக்குடியிருப்பில் இன்று (08.12.2018 )காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. இந்த இரு வீடுகளிலும் இருந்த 09 பேர் தற்காலிகமாக யோக்ஸ்போட் கலாச்சார மண்டபத்தில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் மின் கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். தீ ஏற்பட்ட போது வீட்டிலிருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதன் பிறகு  அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள்,  உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

 இது தொடர்பாக தலவாக்கலை  காவல்த நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த  காவல்துறையினர் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை  மேற்கொண்டு வருகின்றனர்.  #வீடுகள்  #லயக்குடியிருப்பில் #தீ #தலவாக்கலை

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More