Home இலங்கை சாவகச்சேரி வைத்தியசாலையில், இருவர் பணியாளர்களைத் தாக்கி அடாவடி…

சாவகச்சேரி வைத்தியசாலையில், இருவர் பணியாளர்களைத் தாக்கி அடாவடி…

by admin

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மருந்து கட்டுவதற்கு  சென்ற இருவர் வைத்தியசாலைப் பணியாளர்களை தாக்கி காயப்படுத்தியதுடன் தளபாடங்களையும் சேதமாக்கி அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

அடாவடியில் ஈடுபட்ட இருவரும் தப்பிச் செல்ல முற்பட்ட போது, பொதுமக்களால் மடக்கிப் பிடித்து நையப்புடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் சாவகச்சேரி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்தச்சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின் மருந்து கட்ட வைத்தியசாலை பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த போது, அவ்விளைஞர்கள் தமக்கு உடனடியாக மருந்து கட்டவில்லை என்று வைத்தியசாலை பணியாளர்களையும் தாதிய உத்தியோகத்தர்களையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியதுடன் வைத்தியசாலை தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அங்கு கடமையிலிருந்த பாதுகாப்பு பணியாளர்களையும் இரும்பு கம்பிகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது அங்கு குழுமிய அப்பகுதி இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து நையப்புடைத்து சாவகச்சேரி காவற்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இருந்த போதும் ஒருவர் கைவிலங்கோடு காவற்துறையினரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். எனினும் இளைஞர்கள் மீண்டும் அந்த இளைஞரைப் பிடித்து காவற்துறையினரிடம்  ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று  காவற்துறையினர்  தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More