ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசியலமைப்புப் பேரவை எதிர்வரும் 12ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இதன்போது, உயர் நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன. எனினும், அரசியலமைப்புப் பேரவை ஒருவரைப் பரிந்துரைத்தால் அரசியலமைப்பின் பிரகாரம் அவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு உள்ளது.
இந்த நிலையில், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினராக எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை நிலவுகின்றது. எதிர்க்கட்சித் தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாச, நாடாளுமன்றின் அங்கீகாரம் இல்லாது 12ஆம் திகதி கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதென தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love
Add Comment