Home உலகம் ஈராக்கில் போராட்டக்காரர்கள் இனந்தெரியாதோர் மீது தாக்குதல் – 23 பேர் பலி :

ஈராக்கில் போராட்டக்காரர்கள் இனந்தெரியாதோர் மீது தாக்குதல் – 23 பேர் பலி :

by admin

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈராக்கில கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வேலைவாய்ப்பு, ஊழலை ஒழித்தல், பொதுமக்கள் பாதுகாப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல முக்கிய நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அந்நாட்டு காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். அரசின் இந்த செயலுக்கு ஐ.நா சபை கண்டனம் தெரிவித்திருந்தது

மேலும் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு பிரதமர் அதெல் அப்துல் மஹதி பதவி விலகுவதாக அறிவித்தார் ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.  இந்நிலையில் , தலைநகர் பாக்தாத்தில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றபோது, இனந்தெரியாத சிலர் உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 3 காவல்துறையினர் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என முதல்கட்ட செய்தி வெளியாகியருந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.  #ஈராக்  #போராட்டக்காரர்கள்  #இனந்தெரியாதோர்   #தாக்குதல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More