Home இலங்கை சுவிஸ் தூதரக அதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு

சுவிஸ் தூதரக அதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு

by admin

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். குறித்த பணியாளர், அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில், தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில், விசாரணைகளுக்காக, இன்று முன்னிலையான நிலையில், அவர் வழங்கிய சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் அவரின் மனநிலை குறித்து பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம அங்கொடை மனநல வைத்தியசாலை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டதனையடுத்து அவர் அங்கு அனுப்பி வைப்பட்டிருந்தார்.
அங்கு இடம்பெற்ற மேலதிக பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக்கப்பட்டார்.

மனநல பரிசோதனை அறிக்கை கிடைத்ததன் பின்னர், அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படும் நிலையில் அவ்வாறு கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது  #சுவிஸ் #தூதரக.அதிகாரி  #கைது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More