0
பாறுக் ஷிஹான்

கல்முனை பிராந்தியத்தில் அதிகாலை முதல் மதியம் வரை அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து காவல்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர். புதன்கிழமை(18) அதிகாலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை நகரப்பகுதி நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி ,பாண்டிருப்பு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இத்திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது இ தலைக்கவசம் அணியாது செல்வது ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது அதிவேகமாக செல்வது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இடம்பெற்றதுடன் இதன் போது விழிப்பூட்டல் செயற்பாடுகள் அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து கல்முனை காவல் நிலைய போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். #கல்முனை #சோதனை



Spread the love