Home இலங்கை யாழில் இன்று மூன்று இடங்களில் வழிப்பறிக் கொள்ளை

யாழில் இன்று மூன்று இடங்களில் வழிப்பறிக் கொள்ளை

by admin
யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை மூன்று இடங்களில் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று  காவல்துறையினர் தெரிவித்தனர்.  சுன்னாகம்  காவல்துறை  பிரிவில் இரண்டு சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் கோப்பாய் காவல்துறை பிரிவிலும் இன்று அதிகாலை மற்றொரு வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் கதிர்வேல் செவ்வேளிடம் இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக அவரால் கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  இன்று  அதிகாலை 4.30 மணியளவில் கோப்பாயில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளிலில் வீதியில் பயணித்த அவரிடம் மூன்று பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து இடைமறித்து பணம் மற்றும் அலைபேசியை பறித்தெடுத்துச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  #யாழில்  #வழிப்பறிக்கொள்ளை #செவ்வேளிடம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More