Home உலகம் ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: 6 அப்பாவிகள் பலி?

ஈராக்கில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: 6 அப்பாவிகள் பலி?

by admin

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவாளர்கள் சென்ற வாகன அணிவகுப்பை குறிவைத்து அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதகரத்தை அண்மையில்  ஈரானைச்  சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டம் பற்றி அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக விசாரித்த போது ஈரானில் உள்ள துணை ராணுவபடையான ஹஷீத் அல்-ஷாபி பற்றிய தகவல்கள் கிடைத்தன. இந்த துணை ராணுவ படை காசிம் சுலைமானி என்பவர் தலைமையில் செயல்பட்டு வரும் அமைப்பாகும்.

இந்த துணை ராணுவ படை ஈரான் அரசுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. இந்த துணை ராணுவ படையில் பெரும்பாலும் ஷியா பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அமைப்புக்கு ஈரான் மக்களிடம் மிகுந்த செல்வாக்கு உள்ளது.

வெளிநாட்டில் இஸ்லாமிய அமைப்புகளிலும் ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவ படைக்கு ஆதரவு பெருகியது. இந்த அமைப்பு அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது. இதைத்தொடர்ந்து இந்த அமைப்பை அமெரிக்கா கண்காணித்து வந்தது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பாக்தாத்தில் ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவ படை ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியபோது அமெரிக்கா கடும் கோபம் அடைந்தது. இதைத்தொடர்ந்து பாக்தாத்தில் நேற்று அதிகாலை காசிம் சுலைமானி சென்று கொண்டிருந்த வாகன அணிவகுப்பு மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது.

ஆளில்லாத விமானங்கள் மூலம் ஏவுகணை வீசி இந்த தாக்குதலை அமெரிக்க ராணுவம் நடத்தியது. இதில் ஹஷீத் அல்-ஷாபி துணை ராணுவ அமைப்பு தலைவர் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அவருடன் துணை தலைவர் அபுல் மஹதி உள்பட மேலும் 7 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க ராணுவம் மீது காசிம் சுலைமானி தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருந்தது உறுதியாக தெரிய வந்ததால் காசிம் சுலைமானி கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

காசிம் சுலைமானி கொல்லப்பட்டதால் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள்  கடும் ஆவேசம் அடைந்துள்ளனர். அதுபோல ஈரான் நாட்டு அரசும் கடும் கோபம் அடைந்துள்ளது. காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்காக அமெரிக்காவை பழி வாங்குவோம் என ஈரான்  ஜனாதிபதியும்  ஹசன் ரவுஹானியும்,  தீவிரவாதிகளும்  எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து அமெரிக்காவையும், ஈரானையும் உலக நாடுகள் சமரசம் செய்தனர். அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷியா, சிரியா உள்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்தியா, சீனா உள்பட பல நாடுகள் அமெரிக்காவை சமரசம் செய்தன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More