Home இந்தியா இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்

by admin


இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாட்டு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும் என ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது

முதல் நாளான இன்று ஆளுனர்; பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அந்த உரையில பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள உள்ளன.

இந்தநிலையில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும். தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும்.

இன்றைய நிலவரப்படி, 17 மீனவர்கள் மட்டுமே இலங்கை அரசின் சிறையில் உள்ளனர். அவர்களையும் விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  #இலங்கை  #தமிழ் #அகதிகள் #இரட்டைக்குடியுரிமை #ஆளுனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More