Home இலங்கை பசறை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

பசறை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

by admin

(க.கிஷாந்தன்)

பதுளை மாவட்டம் பசறை பகுதியில் (06.01.2020) அன்று மாலை இடம்பெற்ற  பேருந்து விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6ம் கட்ட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பசறை பகுதியிலிருந்து எக்கிரிய எனும் பகுதிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து ஒன்றே இவ்வாறு பாரிய வளைவு பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவருடன் 12 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். #பசறை  #விபத்து # மாணவர்கள்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More