Home இலங்கை “மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்’ யாழ் பல்கலையில் தமிழமுதம்…

“மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்’ யாழ் பல்கலையில் தமிழமுதம்…

by admin

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழமுதம் நிகழ்வு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்விழாவில் இவ்வருடம் “மொழிதனைக் கடையும் இளையவர் பயணம்’ என்ற தொனிப் பொருளில் இடம்பெறுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் நோக்கிய எழுச்சிப் பேரணியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழர் கலாசார – பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த சிலம்பு, கரகம், பொம்மலாட்டம், புலியாட்டம், கம்படி, கரகாட்டம் மற்றும் இன்னியம் முழங்க விருந்தினர்கள் பிரதான வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் முதன்மைவிருந்தினராகக் கலந்து கொண்டார்.

வடக்கு மகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா, யாழ். மாநகர முதல்வர் இ. ஆனோல்ட், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி. மணிவண்ணன், அதன் செயலாளர் செ. கஜேந்திரன் ஆகியோரும் விருந்தினர்களாக அழைத்துவரப்பட்டனர்.

மாணவர்கள், பல்கலைக் கழக சமூகத்தினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More