Home இலங்கை கடை எரிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்கொலை…

கடை எரிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்கொலை…

by admin

யாழ்.பருத்தித்துறை பகுதியில் கடை எரிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தனக்கு தானே தீ மூட்டியவாறு புகையிரதம் முன்பாக பாய்ந்து தனது உயிரை மாய்த்துள்ளார். பருத்தித்துறை பன்னங்கட்டி பகுதியை சேர்ந்த 32  வயதுடைய  ராஜசேகரம் ராஜசீலன்  என்பவரே அவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்.

பருத்தித்துறை சந்தை கட்டட தொகுதியில் பான்சி கடையுடன் இணைந்த புடவை கடை ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ மூட்டி எரிக்கப்பட்டது. அதனால் கடையில் இருந்த சுமார் 50 இலட்ச ரூபாய் பெறுமதியான உடுபுடவைகள் மற்றும் பான்சி பொருட்கள் என்பன எரிந்து நாசமானது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை காவற்துறையினர், அருகில் இருந்த கடையின் CCTV கமரா பதிவுகளின் அடிப்படையில் எரிக்கபட்ட கடைக்கு அருகில் உள்ள மற்றொரு கடை உரிமையாளரே கடைக்கு தீ மூட்டி தப்பி செல்வதனை ஆரம்ப கட்ட விசாரணைகளின் கண்டறிந்துள்ளனர்.

அதன் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்யும் நோக்குடன் நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு சென்ற போது, அவர் தலைமறைவாகி இருந்தார். அந்நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவற்துறையினர் தீவிரப்படுத்தி இருந்தனர்.

அந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை. 6.30 மணியளவில் யாழில்.இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்பாக தனக்கு தானே தீ மூட்டியவாறு பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்

சம்பவம் தொடர்பில் கொடிகாம காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More