Home இலங்கை கொழும்புத்துறை நெடுங்குளத்தில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்…

கொழும்புத்துறை நெடுங்குளத்தில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்…

by admin

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்கதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையடுத்து, அந்தக் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுக்குச் சென்ற யாழ்ப்பாண நில அளவைத் திணைக்களத்தினர் காணிகளை அளவீடு செய்யாமல் அங்கிருந்து திருப்பி சென்றனர்.

கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான இக் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் மேற்கொள்வவதற்கு நில அளவைத் திணைக்களத்தினால் அங்கு சென்றிருந்தனர்.

காணிகளை அளவிடுவதற்கு காணி உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதன் போது நில அளவைத் திணைக்களத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு யாழ் பிரதேச செயலாளர் சுதர்சன் சென்று  மக்களுடன் கலந்துரையாடியிருந்தார். ஆயினும் மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தொடர்ந்து தெரிவித்த எதிர்ப்புக்களையடுத்து காணி அளவீடுகள் மேற்கொள்ளாமல் திரும்பி சென்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More