Home இலங்கை வசந்த கரன்கொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவு..

வசந்த கரன்கொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவு..

by admin

முன்னாள் கடற்படைத் தளபதி, வசந்த கரன்கொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கினை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று (07.02.20)  அழைப்பானை விடுத்துள்ளது. முன்னதாக இரண்டு தடவைகள் அவருக்கு அழைப்பானை  விடுக்கப்பட்ட நிலையில் இன்றும் அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

இதனையடுத்து, கடற்படை தளபதி மற்றும் பதில் காவற்துறைமா அதிபர் ஊடாக வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை  வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 13 கடற்படை அதிகாரிகள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். அத்துடன், வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More