Home உலகம் கொரோனா தொற்றுள்ள நாணயத்தாள்களை எரிக்க சீனா முடிவு – உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது

கொரோனா தொற்றுள்ள நாணயத்தாள்களை எரிக்க சீனா முடிவு – உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது

by admin

சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்றுள்ள நாணயத்தாள்களை எரிக்க அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று மட்டும் {ஹபெய் மாகாணத்தில் 132 பேர் இறந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 72,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் 24 மணி நேரமும் போராடி வருகின்ற அதேவேளை வைத்தியர்களே கொரோனாவுக்கு பலியாவது அதிகரித்துள்ளது. கொரோனா தாக்குதல் அதிகமான வுகானின் வுச்சங் மருத்துவமனையின் இயக்குநர் லியு ஜிமிங் நேற்று காலமானார்.

இந்தநிலையில் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சீன அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி தும்மினாலோ, இருமினாலோ அதனால் வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாகக் கூட கொரோனா பரவும் வாய்ப்புள்ளது.

இதனால் நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த நாணயத்தாள்கள் மூலமாகவும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. எனவே, ஹூபெய் மாகாணத்தின் மருத்துவமனை,  கடைத்தொகுதிகள், பேருந்துகள் போன்றவற்றில் வசூலான நாணயத்தாள்களை அழிக்க சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதியில் உள்ள வங்கிக்கு வரும் நாணயத்தாள்களை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பத்தில் வைத்து நோட்டுகளை அழிக்க அனைத்து வங்கிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.   #கொரோனா #தொற்று  #நாணயத்தாள் #சீனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More