Home இலங்கை மட்டு. கத்தோலிக்க தேவாலயத்துக்குள் சென்ற இரு பெண்கள் உட்பட நால்வர் கைது…

மட்டு. கத்தோலிக்க தேவாலயத்துக்குள் சென்ற இரு பெண்கள் உட்பட நால்வர் கைது…

by admin

மட்டக்களப்பு புனித செபஸ்டியன் தேவாலயத்தில் ஆராதனையின் போது சந்தேகத்திற்கு இடமாக ஆலயத்திற்கு சென்ற இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த  தேவாலயத்தில் இன்று (01.03.20) காலை ஆராதனை இடம்பெற்றது. இதன்போது அங்கு இரு பெண்கள் உட்பட 4 பேர் ஆலயத்தினுள் உட்புகுந்ததையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆராதனையில் ஈடுபட்ட மக்கள், அருட்தந்தையூடாக காவற்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற  காவற்துறையினர் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்பாறை இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண், அவரின் 39 வயதுடைய வாய் பேசமுடியாத மகள், 23 வயதுடைய மகன், 33 வயதுடைய மருமகன்  என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மகளின் நோயை குணப்படுத்துவதற்காக இரு மோட்டார் சைக்கிளில் சீயோன் தேவாலயத்துக்கு அவர்கள் சென்றதாகவும் அங்கு ஆலயம் பூட்டப்பட்டிருந்ததையடுத்து, ஆராதனை வேறு இடத்தில் நடப்பதாக அறிந்து இந்த தேவாலயத்துக்குள் வந்தனர் என காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More