Home இலங்கை வாள் கொண்டு சென்ற பூசகர்

வாள் கொண்டு சென்ற பூசகர்

by admin

ஆலய தேவைக்காக வாள் கொண்டு சென்ற ஆலய பூசகரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் காவல்துறை பிணையில் விடுவித்துள்ளனர். குறித்த சம்பவம் குப்பிளான் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்றது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குப்பிளான் பகுதியில் உள்ள ஆலயத்தில் பூஜையை முடித்துக்கொண்ட பூசகர் அங்கிருந்து , உரும்பிராய் பகுதியில் உள்ள ஆலயத்திற்கு பூஜைக்கு செல்லும் போது , அந்த ஆலய தேவைக்காக குப்பிளான் ஆலயத்தில் இருந்து வாள் ஒன்றினை கொண்டு சென்றுள்ளார்.

அவ்வேளை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வாளுடன் சென்ற பூசகரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துசென்று விசாரணை செய்தனர். பின்னர் காவல்துறைபிணையில் பூசகரை செல்ல அனுமதித்த காவல்துறையினர்; , பூசகர் கொண்டு சென்ற வாள் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் என்பவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாள் மற்றும் மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் சான்று பொருட்களாக ஒப்படைக்கவுள்ளதாகவும் , வாள் கொண்டு சென்றமை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.  #வாள்  #பூசகர்  #குப்பிளான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More