Home இந்தியா மகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டிகவசம் பாடல்களை வெளியிட இடைகால தடை

மகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டிகவசம் பாடல்களை வெளியிட இடைகால தடை

by admin

மகாநதி ஷோபனா பாடிய கந்தசஷ்டி கவசம் பாடல்களை வெளியிடுவதற்கு சிம்பொனி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது.

மகாநதி படம் மூலம் பிரபலாமன கர்நாடக இசை கலைஞரான நடிகை ஷோபனா கடந்த 1995 -ம் ஆண்டு சிம்பொனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கந்தசஷ்டி கவசம் மற்றும் டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ ஆகிய இரண்டு அல்பங்களை பாடி உள்ளார்.  இந்த இரண்டு அல்பங்களும் ‘சிம்பொனி’ மற்றும் ‘பக்தி எப்.எம்’ என்ற பெயரில் யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய பாடலை பயன்படுத்தி சிம்பொனி நிறுவனம் வருமானம் பெறுவதாக தெரிவித்து ஷோபனா சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணக்கு வந்த நிலையில் 13 வயதில் மைனராக இருந்தபோது ஷோபனாவிடம் சிம்பொனி நிறுவனம் போட்ட ஒப்பந்தம் சட்டரீதியாக செல்லாது என ஷோபனா தரப்பில் முன்னிலையான சட்டத்திரணி வாதிட்டார்.

மேலும், ஷோபனாவின் முகநூல் பக்கத்தில் இருந்த புகைப்படங்களை அனுமதி இல்லாமல் எடுத்து பாடல்களுக்கு பயன்படுத்தியது சட்ட விரோதமானது என்பதால் இந்த இரண்டு அல்பங்களையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.

இந்த வாதங்களை ஏற்ற நீதிபதி மகாநதி ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் மற்றும் ‘டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ அல்பங்களை வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.  #மகாநதி  #ஷோபனா  #கந்தசஷ்டிகவசம்   #தடை  #சிம்பொனி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More