Home உலகம் இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி -உலகளாவிய ரீதியில் 8961 பேர் பலி

இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி -உலகளாவிய ரீதியில் 8961 பேர் பலி

by admin

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து அங்கு உயிரிழந்தோh எண்ணிக்கை 2978 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் உருவாகி 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனாவை தொடர்ந்து இத்தாலியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு பலி எணணிக்கை 2,978 ஆக அதிகரித்துள’ளதுடன் 35,713 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 8961 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 219,087 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  #இத்தாலி  #பலி   #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More