Home இலங்கை இணைப்பு2 -வீடு திரும்பினார் ஸ்ரீதரன்- சமூக பொறுப்புடன் சென்றேன்

இணைப்பு2 -வீடு திரும்பினார் ஸ்ரீதரன்- சமூக பொறுப்புடன் சென்றேன்

by admin

 தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையை வழங்குகின்ற அரசியல் பிரமுகர் எனும் வகையில் சமூக பொறுப்புடனேயே யாழ்.போதனா வைத்திய சாலைக்கு பரிசோதனைக்கு சென்றிருந்தேன் என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என வெளியான தகவல் தொடர்பில் தெளிவுபடுத்தும் விதமாக ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
  கிளிநொச்சி வைத்திய சாலையில் எனது நண்பர் வைத்தியர் குகராஜா அவர்களிடம் சென்று எனக்கு ஏற்பட்டிருந்த  தொண்டை கரகரப்பு தொடர்பில் ஆலோசனை கேட்க சென்றிருந்தேன்.

பங்குனி மாதத்தில் வெக்கை காலத்தில் இவ்வாறான தொண்டை கரகரப்பு ஏற்படும். மக்களோடு தொடர்ந்து பேசுதல் மற்றும் மக்கள் சந்திப்புக்களை அடிக்கடி நடத்துவதனால் அது ஏற்படும். அது தொடர்பில் வைத்தியரிடம் ஆலோசனை பெறவே இன்றைய தினம் கிளிநொச்சி வைத்திய சாலைக்கு சென்றிருந்தேன்.
கடந்த 02ஆம் திகதி ஜெனிவாவில் இருந்து நாடு திரும்பி இருந்தேன். அதனால், வைத்தியரின் ஆலோசனைக்கமைவாக , சமூக பொறுப்புடன் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சென்று தெளிவு நிலையை ஏற்படுத்த விரும்பினேன் அங்கு சென்று தெளிவுபடுத்திய பின்னர் தற்போது நான் வீடு திரும்பி வீட்டிலே நலமாக இருக்கிறேன்.
ஒவ்வொரு மனிதர்களுக்கும் சமூக பொறுப்புண்டு. தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமையை வழங்குகின்ற அரசியல் பிரமுகர் எனும் வகையில் , நாங்கள் அந்த சமூக பொறுப்பை சரியான பாதையில் செய்ய வேண்டும். அதற்கான முயற்சியையே நான் முன்னேடுத்திருந்தேன். அதனை பலர் விநோதமாக வித்தியாசமாக தங்களின் எண்ணங்களின் அடிப்படையில் தகவல்களை பரப்பியுள்ளனர் என தெரிவித்தார்.
வீடு திரும்பினார் ஸ்ரீதரன்-

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வைத்திய பரிசோதனையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் உறுதிப்படுத்தி உள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

அண்மையில் ஐ.நாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றி மார்ச் 2ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியிருந்ததால் சமூக பொறுப்புடன் இரத்த பரிசோதனையின் தொடர்ச்சியாக கொரோனா நோய் தொடர்பான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது..

பரிசோதனைகள் முழுமையாக நிறைவடைந்து எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் எனது தந்தையான முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர் சிறீதரன்   வீடுதிரும்பிவிட்டார் என தெரிவித்தார்  #வீடு  #ஸ்ரீதரன்  #கொரோனா #மகன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More