Home இலங்கை அனைத்து தனியார் மருந்தகங்கள் – விற்பனை நிலையங்களை மூடுமாறு உத்தரவு

அனைத்து தனியார் மருந்தகங்கள் – விற்பனை நிலையங்களை மூடுமாறு உத்தரவு

by admin


மறு அறிவித்தில் வரை அரச மருந்தகங்கள் தவிர அனைத்து தனியார் மருந்தகங்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு காவல்துறைமா அதிபரினால் அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனினும், மருந்தகங்களினால் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அனைத்து விற்பனை நிலையங்களையும் உடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் காவல்துறைமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்காக நாடு பூராகவும் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், குறித்த விற்பனை நிலையங்களை திறந்து வைத்து நுகர்வோருக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. #தனியார்  #மருந்தகங்கள்,  #விற்பனைநிலையங்கள்   #உத்தரவு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More