Home இலங்கை கோத்தாவின் தீர்மானத்திற்கு சர்வதேச மன்னிப்பு சபை  கண்டனம்

கோத்தாவின் தீர்மானத்திற்கு சர்வதேச மன்னிப்பு சபை  கண்டனம்

by admin

 

முன்னாள் ராணுவ அதிகாரியான சுனில் ரத்னாயக்கவிற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ பொது மன்னிப்பு வழங்க எடுத்த தீர்மானமானது சமூகத்திற்கு கவலையளிக்கும் செய்தி என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான பொறுப்புகூறல் மிகவும் குறைந்தளவிலேயே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிய குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்ற ஒருவருக்கு இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டதன் மூலம் அதற்கு இணையான குற்றங்களை இழைக்கும் ஒருவர், சட்டத்தின் முன் குற்றவாளியாகக் காணப்பட்டாலும் அவருக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பதை பிரதிபலிப்பதாக சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ஜனாதிபதி தெரிவித்தவாறு இத்தகைய தீர்மானங்களை எதிர்காலத்திலும் மேற்கொள்வதற்கான சாத்தியம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவும் சூழலை பயன்படுத்தி இத்தகைய குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதை அருவருப்புடன் கண்டிப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்கு 2015 ஆம் ஆண்டு நீதி கிடைத்தாலும், இத்தகைய ஏதேச்சையான முடிவுகள் நீதித் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.  #கோத்தாபயராஜபக்ஸ #சர்வதேசமன்னிப்புசபை #கண்டனம் #மன்னிப்பு #சுனில்ரத்னாயக்க

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More