Home சினிமா பரவை முனியம்மா காலமானார் :

பரவை முனியம்மா காலமானார் :

by admin

பிரபலமான நாட்டுப்புறப் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா தனது 76ஆவது வயதில் காலமாகியுள்ளார். சில காலமாக உடல்நிலைப் பாதிப்பிக்குள்ளாகியிருந்த பரவை முனியம்மா சில நாட்;களுக்கு முன் உடல்நிலை மோசமானதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் கடும் மூச்சுத் திணறல் காரணமாக அவரது உடல்நிலை நேற்றிரவு மோசமடைந்தமையினால் இன்று (29) அதிகாலை வீட்டிற்குக் கொண்டு சென்றிருந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருள் படத்தில், ‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி…’ என்ற பாடல் மூலம் பிரபலமான பரவை முனியம்மா ஏராளமான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்கள் பாடியதுடன் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறார்.

தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தில் கடைசியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது  #பரவைமுனியம்மா  #காலமானார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More