Home உலகம் போராட்டக்காரர்களை சுட்டுவிடுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உத்தரவு

போராட்டக்காரர்களை சுட்டுவிடுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உத்தரவு

by admin


பிலிப்பைன்சில் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் கலவரம் செய்தால் அவர்களை சுட்டு விடுமாறு அந்நாட்டு ஜனாதிபதி    ரொட்ரிகோ டூர்ட்டே ( Rodrigo Duterte உத்தரவிட்டுள்ளார்.

மெட்ரோ மணிலாவில் உணவு முறையாக விநியோகிக்கப்படவில்லை என இடதுசாரி குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தை தொடங்கியதையடுத்து, அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். ‘பிரச்சனை ஏற்பட்டு சண்டையிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டால் அவர்களை சுட்டுவிடுங்கள்’ என தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரொட்ரிகோ டூர்ட்டே தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளில் ‘மேம்படுத்தப்பட்ட சமூக தனிமைப்படுத்துதல்’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதோடு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பயண கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் நாய் கூண்டுகளில் அடைக்கப்படுவது அல்லது உச்சி வெய்யிலில் அமர நிர்பந்திக்கப்படுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவுகின்ற நிலையில் அது குறித்து மனித உரிமை அமைப்புகளை கவலை தெரிவித்துள்ளன.   #போராட்டக்காரர்களை  #சுட்டுவிடுமாறு  #பிலிப்பைன்ஸ்  #உத்தரவு  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More