Home இலங்கை மன்னாரில் அரச ஓய்வூதியம் பெறும் சிரேஸ்ட பிரஜைகளுக்கு விசேட ஏற்பாடு.

மன்னாரில் அரச ஓய்வூதியம் பெறும் சிரேஸ்ட பிரஜைகளுக்கு விசேட ஏற்பாடு.

by admin

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் சிரேஸ்ட பிரஜைகள் தங்களுடைய ஓய்வூதிய பணத்தை வங்கிகளில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக விசேட ஏற்பாடுகள் இன்று வியாழக்கிழமை (2) முதல் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களை சேர்ந்த ஓய்வூதியம் பெறும் சிரேஸ்ட பிரஜைகள் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட அரச பேருந்துகளில் பிரத்தியோக பாதுகாப்பு மற்றும் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக இராணுவத்தினரின் உதவியுடன் இன்று காலை முதல் அவர்களின் வங்கிகணக்குகள் உள்ள வங்கிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஓய்வூதியம் பெற வருகை தரும் சிரேஸ்ட பிரஜைகளுக்கு விசேட ஒழுங்குகள் வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வாறு அழைத்து செல்லப்பட்டவர்கள் ஓய்வூதிய பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவர்களை அவர்களுடைய வீடுகளுக்கு பாதுகாப்பான முறையில் இராணுவத்தினர் மீண்டும் கொண்டு சென்று விட்டமை குறிப்பிடத்தக்கது.   #மன்னார்  #ஓய்வூதியம்   #விசேடஏற்பாடு

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More