உலகம் பிரதான செய்திகள்

அமேசனில் பழங்குடியின செயற்பாட்டாளர் சுட்டுக்கொலை


அமேசனிலுள்ள பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பிரேசில் நாட்டு அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவாஜஜரா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெசிகோ குவாஜஜரா என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆசிரியரான இவர், அமேசன் காடுகளில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதை எதிர்த்து போராடும் கார்டியன்ஸ் ஒப் பொரஸ்ட் எனும் குழுவின் ஆதரவாளர் ஆவார்.

பல்வேறு வழிகளில் சுரண்டப்பட்டு வரும் அமேசன் காடுகளை பாதுகாப்பதற்காக போராடி வருபவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது.
கடந்த ஆறு மாதங்களில் அமேசன் காடுகளை பாதுகாப்பதற்காகவும், அங்கு வாழ்ந்து தொல்குடிகளின் நிலவுரிமைக்காக போராடியதற்காகவும் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் ஜெசிகோ என்பது குறிப்பிடத்தக்கது.

குவாஜஜராஸ் என்பது 20,000 மக்களைக் கொண்ட பிரேசிலின் மிகப்பெரிய பழங்குடி குழுக்களில் ஒன்றாகும். 2012ஆம் ஆண்டில், அரேரிபோயா பிராந்தியத்தை பாதுகாக்க அவர்கள் கார்டியன்ஸ் ஒப் பொரஸ்ட் எனும் அமைப்பை தொடங்கியிருந்தனர்.

ஜெசிகோவை கொன்றது யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.  #அமேசன் #பழங்குடி #செயற்பாட்டாளர்  #சுட்டுக்கொலை

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.